தற்போது, உலகளவிலுள்ள சுமார் 150 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தாய்ஜிச்சுவன் பயிற்சி நடைபெற்று வருகிறது. 70க்கு அதிகமான நாடுகளிலும் பிரதேசங்களிலும் தாய்ஜிச்சுவன் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இது உலகின் முதலாவது தற்காப்புக் கலை என அழைக்கப்படுகிறது. லீன் அம்மையார் "தாய்ஜிச்சுவன் மற்றும் உடல் நலப் பாதுகாப்பு" என்ற தலைப்பில் இந்த கருத்துரையைக் கேட்டார். அவர் உடற்பயிற்சி மூலம் சிகிச்சையிலும் மறுவாழ்வு அளிப்பதிலும் ஈடுபடும் மருத்துவர் ஆவார். கடந்த சில பத்தாண்டுகளாக அவர் தாய்ஜிச்சுவன் பயிற்சிச் செய்து வருகிறார். தாய்ஜிச்சுவன், உலகளவில் சீனப் பண்பாட்டை செவ்வனே பரப்புரை செய்யக்கூடிய தற்காப்புக் கலையாகும் என்றும் அவர் கருதுகிறார். அவர் கூறியதாவது:
"முன்பு மருத்துவப் புத்தகங்களைப் படித்தன் மூலம் கற்றுக்கொண்ட அம்சங்களும், பூங்காவில் கற்றுக்கொண்ட அம்சங்களும் மேலானவை. பேராசிரியர் வாங் சியாவ் ஜுன் கற்றுக்கொடுக்கும் அம்சங்கள் ஆழமானவை. ஊசி மருத்துவ பயன்பாடு உள்ளிட்ட அந்த அம்சங்கள் மிகவும் செயல்முறை சார்ந்தவை. முன்பு இவற்றை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. உலக மக்கள் தாய்ஜிச்சுவன் மூலம் சீனாவை அறிந்து கொள்ள முடியும். சீனப் பண்பாடு ஆழமான சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. நான் உள்பட அதிக சீனர்கள் சீனப் பண்பாட்டை நன்றாக அறிந்து கொள்ளவில்லை" என்றார் அவர்.