இக் கருத்துரையின் இறுதியில் பேசுகையில், தற்காலத்தில் மக்களின் வாழ்க்கையும் பணியும் விரைவாகி விட்டன என்றும், மக்கள் இத்தகைய அவசரத்தை மெதுவாக்க வேண்டும் என்றும் வாங் சியாவ் ஜுன் யோசனை தெரிவித்தார். தங்களது உடல் மற்றும் மன நலத்தை நிலைநிறுத்தும் பொருட்டு, தாஜிச்சுவனை மேலதிகமாக பயிற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார். அவர் கூறியதாவது:
"பூங்காவில் தாய்ஜிச்சுவன் பயிற்சி செய்யும் மக்கள் மென்மெலும் குறைந்து வருகின்றனர். இருந்த போதிலும், தாய்ஜிச்சுவன் பயிற்சி, பள்ளிகளில் செவ்வனே நடத்தப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக, ஹெநான் மற்றும் ஷான் துங் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில், பாடங்களுக்கிடை தாய்ஜிச்சுவன் விளையாடு போன்று மாணவர்களால் பயிற்சி செய்யப்படுகிறது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல்லாமல், தற்போது மாநகரங்களில் மக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுகின்றனர். தாய்ஜிச்சுவன் பயிற்சி செய்யும் நேரம் அவர்களுக்கு இல்லை" என்றார் அவர்.
நேயர்களே, "பெய்சிங்கில் நடைபெற்ற 'தாய்ஜிச்சுவன் மற்றும் உடல் நலப் பாதுகாப்பு' பற்றிய கருத்துரையை அறிய தந்தோம்". இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.