வசந்த விழாப் படங்கள், சீனாவின் தனிச்சிறப்பு வாய்ந்த நாட்டுப்புற ஓவிய வடிவமாகும். சீனாவின் நாட்டுப்புற செவிவழிக் கதைகள், புராணக் கதை வீரர்கள், பூக்கள், பறவைகள் உள்ளிட்ட உருவங்கள், இப்படங்களின் கருப்பொருட்களாக இடம்பெற்றன. யாங் லியு சிங் வசந்த விழா படங்களில், தங்க மீன்னைப் பிடித்த கொழுத்த குழந்தை கருப்பொருள் மிக புகழ்பெற்ற ஒன்றாகும். மக்கள் ஆண்டுதோறும் செல்வ செழிப்பு அடைவர் என்பதை இது பொருட்படுத்துகிறது. யாங் லியு சிங் வசந்த விழாப் படத்தின் தயாரிப்பு முறை, சீனப் பண்டைக்கால ஓவிய பாரம்பரியத்தையும், சில நூற்றாண்டுகளுக்கு முன் மிங் வம்சத்தின் மரப் பலகை ஓவிய வடிவத்தையும் சேர்த்தது. மரப் பலகை மாதிரியை பயன்படுத்தி அச்சிடுவதும், கையால் வரைவதும் இணைந்த வழிமுறை இதுவாகும். ஓவியர் வசந்த விழா படங்களைத் தயாரிக்கும்போது, மரப் பலகையில் படத்தின் வடிவங்களை செதுக்கி, வண்ண மை எழுதுக்கோலை பயன்படுத்தி, வரைக்கின்றார். யாங் லியு சிங் வசந்த விழாப் படங்கள், நாட்டுப்புற கலையழகு மிகுந்தவை.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முந்திய மிங் வம்சத்தில் யாங் லியு சிங் வசந்த விழா படக்கலையின் பாணி உருவாகத் துவங்கியது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முந்தைய சிங் வம்சத்தின்போது, இப்படக்கலை வளர்ச்சி, உச்ச நிலையடைந்தது. அப்போது, யாங் லியு சிங் வட்டத்தில் வசந்த விழா படங்களின் தயாரிப்பில் ஈடுபடும் கைவினை கலைஞர்களின் எண்ணிக்கை, 3 ஆயிரத்தை தாண்டியிருந்தது. சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதற்கு முன், பல்வகை காரணங்களால், யாங் லியு சிங் வசந்த விழா படங்களின் தயாரிப்பு திறன் அழியும் விளிம்பில் இருந்தது. கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளில், தனது வீட்டின் தோட்டத்தில், வசந்த விழா படக் கண்காட்சியை ஹோ சிங் யுவ் நடத்தினார். இக்கண்காட்சி, மக்களின் பாராட்டைப் பெற்றது. இது ஹோ சிங் யுவ்வுக்கு மகிழ்ச்சி தந்தது.