ஹெய்லோங்ஜியாங் மாநிலத்தைச் சேர்ந்த திரு குவாங் நண்பர் அறிமுகப்படுத்திய பிறகு, ஹோ சிங் யுவ்வின் வசந்த விழா படக்காட்சி அரங்கிற்குச் சென்று பார்வையிட்டார். தற்போது, சீனாவின் பல நாட்டுப்புறக் கலைகள், மிக முக்கிய காலக்கட்டத்தில் உள்ளன என்றும், அவற்றை செவ்வனே பாதுகாக்கப்பட்டு, பரப்புரைச் செய்யப்படாமல் இருந்தால், இழந்து விட நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார். சீனத் தேசத்தின் பண்பாட்டையும், நாட்டுப்புறக் கலையையும் கையேற்றுவதில் ஈடுபடும் திரு ஹோ சிங் யுவ்வை அவர் மிகவும் பாராட்டுகிறார். திரு ஹோ சிங் யுவ்வின் தன்னலமற்ற செயல், நாட்டுப்புறக் கலையின் வளர்ச்சியைத் தூண்டும் அதே வேளையில், சமூகப் பொறுப்பை காட்டுகிறது என்று அவர் கருத்துத் தெரிவித்தார்.
ஹோ சிங் யுவ், யாங் லியு சிங் வசந்த விழா படக்கலையின் எதிர்காலம் மீது அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளார். முதலில், யாங் லியு சிங் வசந்த விழா படக்காட்சி அரங்கின் செல்வாக்கை அதிகரித்து, தற்போதைய காட்சி அளவை விரிவாக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தவிர, முந்தைய காலத்தில் வசந்த விழா படங்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட கனிம மற்றும் தாவர வண்ணப் பொருட்களை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இந்த இயற்கை சார்ந்த வண்ணப் பொருட்கள், நூற்றுக்கு மேலான ஆண்டுகளாக படங்களை மங்காமல் இருக்க செய்யும். இறுதியில், மேலதிக இளைஞர்கள், வசந்த விழா படத் தயாரிப்பில் ஈடுபட்டு, இந்த பழமை வாய்ந்த துறைக்கு உயிராற்றலைத் தர வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
நேயர்களே, "சீனாவின் தியன்சின் யாங் லியு சிங் படக்கலை" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.