2009ஆம் ஆண்டு, சீனத் தேசிய இன ஆணையமும், சீன நிதி அமைச்சகமும் தனிச்சிறப்பு வாய்ந்த சிறுபான்மை தேசிய இனக் கிராமங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகளைச் செயல்படுத்த துவங்கின. கடந்த மூன்றாண்டுகளில், சீன நடுவண் அரசு, சிறுபான்மை தேசிய இன வளர்ச்சிக்கு 27 கோடி யுவான் நிதி ஒதுக்கீடுச் செய்துள்ளது. 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையான ஐந்தாண்டுகளில், சீனா முழுவதிலும் தனிச்சிறப்பு வாய்ந்த 1000 சிறுபான்மை தேசிய இனக் கிராமங்கள் பாதுகாக்கப்பட்டு, சீரமைக்கப்படும். தவிர, சிறுபான்மை தேசிய இனங்களின் தலைசிறந்த பாரம்பரிய பண்பாடுகள் பயன்தரும் முறையில் பாதுகாக்கப்பட்டு, கையேற்றப்பட்டு, பரவல் செய்யப்பட வேண்டும். பல்வேறு தேசிய இனங்களின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய தலைசிறந்த பண்பாட்டுப் படைப்புகள் மேலும் செழிப்பாக இருக்க வேண்டும். சிறுபான்மை தேசிய இனங்களின் அடிப்படை பண்பாட்டு உரிமை மற்றும் நலன்கள் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும். சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டுத் துறையின் வளர்ச்சியில் மேலும் முக்கிய காலடி எடுத்து வைக்க வேண்டும். வெளிநாடுகளுடனான பண்பாட்டுப் பரிமாற்றத்தில் சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டு வளங்கள் மேலதிக பங்காற்ற வேண்டும் என்று சீன அரசவை வெளியிட்ட "சிறுபான்மை தேசிய இன இலட்சியம் பற்றிய 12வது ஐந்தாண்டுத் திட்டம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.