யிரிஹாம் ரெயிம், 12 முகாமு கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்தார். அவர் இக்குடும்பத்தின் நான்காவது தலைமுறை வாரிசு ஆவார். கடந்த பத்தாண்டுகளில், அவர் மூன்று முக்கிய பணிகளில் ஈடுபட்டார். முதலில், அவர் 12 முகாமு பாடநூல்களை தொகுத்து வெளியிட்டார். தவிர, முகாமு அருங்காட்சியகத்தையும் நிறுவினார். சின்ச்சியாங்கின் முதலாவது அரசு சாரா முகாமு கலைக்குழுவை உருவாக்கினார். யிரிஹாம் ரெயி்ம் கூறியதாவது:
"2005ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் Sha Che மாவட்டத்தில் முகாமு கலை விழா நடைபெற்று வருகின்றது. சீனாவில் எனது முகாமு கலைக்குழுவின் செல்வாக்கு அதிகம். சீனாவில் உள்ள பல பெரிய நடவடிக்கைகளில் இக்கலை குழு கலந்துக் கொள்கின்றது. சின்ச்சியாங்கில் பாரம்பரிய முறையில் அரங்கேற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரே ஒரு அரசு சாராக் கலை குழு இதுவாகும். 2013ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள், சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் சார்ப்பில், பொருள் சாராப் பண்பாட்டு நடனப் போட்டியில் இக்கலைக் குழு கலந்து கொண்டு, முதல் பரிசுப் பெற்றது" என்றார் அவர்.