கடந்த சில ஆண்டுகளில், முகாமு பண்பாட்டு வளத்தை Sha Che மாவட்ட அரசு கண்டறிந்து, சேகரித்து வருகிறது. அரசின் முயற்சிகளுடன் முகாமு கலை பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்பட்டது. தவிர, அரசின் ஏற்பாட்டுடன், உயர் இடைநிலை பள்ளி படிப்பை முடித்த 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சின்ச்சியாங் கலைக் கல்லூரியில் பயிற்சிப் பெற்றுள்ளனர். Sha Che மாவட்டத்தின் தொழில் முறை இடைநிலை பள்ளிகளில் 12 முகாமு கலை வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, முகாமு கலையைச் சார்ந்து, சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டுச் சுற்றுலா திட்டப்பணியை Sha Che மாவட்ட அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்திட்டப்பணி மூலம், ஆயிரக்கணக்கான சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் இம்மாவட்டத்துக்குச் சென்றுள்ளனர். Sha Che மாவட்டத்தின் முகாமு கலைக்கு, பண்பாட்டு மற்றும் சுற்றுலாத் தொழில்களுக்கிடையிலான ஒன்றிணைப்புப் போக்கினை இத்திட்டப்பணி விரைவுபடுத்தியுள்ளது.