தமிழன்பன்.....ஆயத்தப் பணிகளை தொடங்கலாம்.
கலை.....முதலில் மீனைச் சுத்தம் செய்ய வேண்டும். பின், தலை மற்றும் வால் பகுதிகளை தனியாக வெட்டிக் கொள்ள வேண்டும். மீனை அதன் முதுகில் அறுத்து இரண்டு பகுதியாகப் பிரிக்க வேண்டும். மீன் முள்ளை பிரித்து எடுத்துவிட்டு, ஒரு சென்டிமீட்டர் அகலமாகவும் 5 சென்டிமீட்டர் நீளமாகவும் மீனை வெட்டிக் கொள்ள வேண்டும்.
தமிழன்பன்.....தொடர்ந்து, வெட்டிய மீன் துண்டுகளில் மது, வெள்ளை மிளகுத்தூள் மற்றும் உப்புப் போட்டு கலந்து ஊறவைக்க வேண்டும்.
கலை.....தொடர்ந்து காய்ந்த காளான் இருந்தால் தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைத்து அது மென்மையடைந்ததும் 0.5 சென்ட் மீட்டர் அளவில் துண்டு துண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
தமிழன்பன்.....இப்படியே கேரட்டையும் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
கலை.....பச்சை நிற காயை சுத்தம் செய்து தட்டில் வையுங்கள். இஞ்சியைத் துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள்.