• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:காய்கறி கலந்த மீன் கறி
  2014-03-11 15:16:03  cri எழுத்தின் அளவு:  A A A   

தமிழன்பன்.....இனி சமைக்கப் போகின்றோம்.

கலை.....முதலில் கொதிக்கின்ற வெந்நீரில் பச்சை நிற காயை போட்டு நிறமாறியதுடன் குளிர் நீரில் போடுங்கள். இஞ்சிக்கீரையை அப்படியே தண்டோடு இந்த வெந்நீரில் போட்டுவிட்டு உடனே வெளியே எடுக்க வேண்டும். இல்லையென்றால் முழுமையாக வெந்து நைந்து போகும்.

தமிழன்பன்.....இப்போது ஒரு மீன் துண்டு, ஒரு காளான் துண்டு மற்றும் ஒரு கேரட் துண்டை மொத்தமாக இஞ்சிக்கீரையின் ஒரு தண்டை எடுத்து கட்டுங்கள். அதன் பின், தட்டில் இஞ்சி துண்டை பரப்பி, அந்த கட்டுகளை அதன் மேல் வைத்து ஆவிப் பாத்திரத்தில் மீன் கட்டுகள் கொண்ட தட்டை வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

கலை.....அதற்குப் பின் மீன் கொண்ட தட்டில் மீறிய சாற்றை வெளியே எடுத்து அதன் மேல் பச்சை நிற காயை விரிவாக்குங்கள்.

தமிழன்பன்....அதேவேளையில் சூடாகிய வாணலியில் உணவு எண்ணெயை ஊற்றி 60 விழுக்காடு சூடாகியவுடன், மீன் கட்டுகளை வையுங்கள்.

கலை.....சரியான பக்குவம் அடைந்தவுடன் தனியாக எடுங்கள். சுவையான காய்கறி கலந்த மீன் தயார்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040