2012ஆம் ஆண்டு இறுதியில், எமது செய்தியாளர், ஷென் சி, ஹுபெய் ஆகிய மாநிலங்களின் கிராமப்புறத்தில் தோற்பாவை நிழற்கூத்து அரங்கேற்றத்தின் கலைஞர்களைப் பேட்டி கண்டார். இக்கலைஞர்களின் வாழ்க்கை நிலைமை பற்றியும், அவர்களது கலை கையேற்றல் பற்றியும் அறிந்து கொள்வது, இப்பேட்டியின் முக்கிய நோக்கமாகு்ம. பேட்டி முடி்வின்படி, கலைஞர்களுக்கு குறிப்பிட்ட உதவித்தொகை கிடைத்துள்ள போதிலும், தோற்பாவை நிகற்கூத்து அரங்கேற்றத்தின் கருப்பொருட்கள் ஒப்பீட்டளவில் வழக்கற்று போனவை. அரங்கேற்ற இடங்கள் ஒப்பீட்டளவில் பழுதுபட்டவை. அதனால் தோற்பாவை நிழற்கூத்து அரங்கேற்றக் கலையின் வாரிசுகள் மிகவும் குறைவு. ஏன் தோற்பாவை நிழற்கூத்து அரங்கேற்றத்தின் பிறப்பிடமான ஷென் சி மாநிலத்தின் குவா மாவட்டத்தில், இந்த அரங்கேற்றத்தைக் கண்டுகளிக்கும் மக்களும் மிக குறைவு.
பாரம்பரிய பண்பாட்டு பாதுகாப்பில் பயன்கள் குறைவு என்று தியன் சிங் போன்ற பண்பாட்டுத் துறை பிரமுகர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர். ஆனால், பண்பாட்டுத் துறையில் சிலர் வேறுபட்ட கருத்துக் கொண்டுள்ளனர். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டி உறுப்பினரும், புகழ் பெற்ற இசையமைப்பாளரும், சீன மத்திய இசைக் கல்லூரி பேராசிரியருமான யே சியாவ் காங் அவர்களில் ஒருவராவார். கடந்த சில ஆண்டுகளில், சீனப் பண்பாட்டின் மறுமலர்ச்சி, சீனப் பாரம்பரியப் பண்பாட்டு சிந்தனையின் மீட்சி ஆகியவை, சீனப் பண்பாடு மற்றும் கலைக்கு ஆற்றிய பங்குகள் பற்றி, சீன அரசும் சீன மக்களும் ஒத்தக் கருத்தை எட்டியுள்ளனர். சீன செய்தி ஊடகங்கள் சீன வரலாற்றில் மாபெரும் தத்துவஞானிகளின் சிந்தனை மற்றும் தத்துவத்தை இயன்றதனைத்தையும் பரவல் செய்துள்ளன. சீனா உலகளவில் கன்ஃபூசியஸ் கழகங்களை நிறுவியுள்ளது. அவை அனைத்தும் சீனப் பண்பாடு மீதான பரவல் மற்றும் பாதுகாப்பாகும் என கருதுவதாக அவர் தெரிவித்தார்.