தற்காலத்தில் சீனாவின் பாரம்பரியப் பண்பாட்டைப் பாதுகாக்க, கலைஞர்கள் பலர் பாடுபட்டு வருகின்றனர். எடுத்துக்காட்டாக, பாரம்பரிய இசை நாடகங்களின் கையேற்றலைத் தூண்டும் பொருட்டு, அரசு வாரியங்கள் அதிக நிதியுதவி வழங்கியுள்ளது. ஆனால், சீன மக்களிடையே பெரும்பாலோர் இந்த இசை நாடகங்களை விரும்பவில்லை. பெரும்பாலான சீன மக்கள், பாரம்பரிய பண்பாட்டை அன்றாட பண்பாட்டு நுகர்வின் முக்கிய அம்சமாகக் கொள்ள விரும்பவில்லை. அதனால் இந்நிலைமையின் காரணத்தைப் பகுத்தாய்வு செய்ய வேண்டும் என்று யே சியாவ் காங் கருத்துத் தெரிவித்தார்.
நேயர்களே, "சீனாவின் கிராமப்புறப் பண்பாட்டு பாதுகாப்பு " பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது. அடுத்த வாரம் சீன பண்பாட்டு நிகழ்ச்சியை கேட்க தவறாரீர்கள்.