கலை.....வாருங்கள். 6 பேர் சாப்பிட வல்ல பெரிய பப்பாளி ஒன்றை தேர்வு செய்யுங்கள்.
தமிழன்பன்.....முதலில் தோலை நீக்க வேண்டும். விதைகளை வெளியேற்ற வேண்டும்.
கலை.....அப்புறம் சின்னஞ்சிறிய துண்டுகளாக வெட்டிக் கொண்டு ஒரு பெரிய பாத்திரத்தில் வையுங்கள்.
தமிழன்பன்.....அடுத்து நேரடியாக ஆப்பில் ஜாமை சேர்க்க வேண்டுமா?
கலை.....இல்லை. அதற்கு முன் சிறிய கரண்டியளவில் உப்பை பப்பாளி துண்டுகளில் போட்டு மெதுவாக கிளற வேண்டும்.
தமிழன்பன்.....வேகமாக பிசைந்தால் பப்பாளி துண்டுகளின் அழகான தோற்றம் பாதிக்கப்படும். அதனால் தானே.
கலை.....உண்மை தான். உப்பை போட்டு கிளறிய பின் 10 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். பழத் துண்டுகள் கொண்ட கிண்ணத்தை ஐஸ் பெட்டியுள்ளே வையுங்கள்.
தமிழன்பன்.....பத்து நிமிடம் கழித்து உப்பு தடவிய பப்பாளி துண்டுகளில் இரண்டு பெரிய கரண்டி ஆப்பில் ஜாம் போட்டு மெதுவாக கலக்க வேண்டும்.
கலை.....குறைந்தது 30 நிமிடம் தொடர்ந்து ஐஸ் பெட்டியுள்ளே வையுங்கள்.
தமிழன்பன்.....அப்புறம் விருந்தினர்களுக்கு சுவைப் பார்க்க வழங்கலாம்.