• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துங் இனத் தன்னாட்சி மாவட்டத்தில் மூன்றாவது திங்கள் மூன்றாம் நாள் நடைபெறும் கொண்டாட்டம்
  2014-04-30 12:51:24  cri எழுத்தின் அளவு:  A A A   

இயற்கைக் காட்சி மண்டலத்தில், மாணவர்கள் இடம்பெறும் சுற்றுலா குழுவை எமது செய்தியாளர் கண்டார். இக்குழுவினரில் 12 பேர், வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். மலேசியாவைச் சேர்ந்த லீ சாவ் ஹாவ் கூறியதாவது:

"இங்குள்ள துங் இனக் கட்டிடங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. நாட்டுப்புறப் பாடல்கள் இனிமையானவை. கடந்த சில நாட்களில், மூன்றாவது திங்கள் மூன்றாவது நாள் கொண்டாட்டத்திற்காக, நாட்டுப்புறப் பாடல் போட்டி, லு செங் என்னும் இசைக் கருவி போட்டி, மாடு சண்டைப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டுள்ளன. கொண்டாட்ட நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. இங்குள்ள சிறுபான்மை தேசிய இனப் பண்பாடு ஆர்வத்தை தூண்டக்கூடியது" என்றார் அவர்.

வாய்ப்பு இருந்தால், குவாங் சியின் சான் சியாங் மாவட்டத்துக்கு வருகை தந்து, அங்குள்ள கோலாகலமான துங் இன நடையுடை பாவனைகளை அனுபவித்து மகிழுங்கள்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040