இப்போது உங்கள் குடும்பத்தினருக்கு கடிதம் எழுதுகின்றீர்களா? வெளியூரில் பயணம் மேற்கொள்ளும்போது, நண்பர்களுக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்புகின்றீர்களா? மக்கள் பாண்டா கரடியைக் குறிப்பிடும்போது, எதையாவது நினைவில் கொள்கின்றீர்களா? எமது உடன் பணியாளர்களான ஜெயா மற்றும் வான்மதியுடன், செங்து நகரிலுள்ள பாண்டா அஞ்சல் நிலையத்தில் பயணம் மேற்கொண்டு, பாரம்பரிய அஞ்சல் சேவையின் புதிய உயிராற்றலை உணர்ந்து கொள்ளலாமா?
சுற்றுலாவில் பேரார்வம் கொண்டுள்ள இளைஞர் ஒருவர், செங்து நகரிலுள்ள இன்பமான பயணம் முடிவுக்கு வருவதை முன்னிட்டு, எவ்வித நினைவுப் பொருளை வாங்குவதென தெரியாமல் இருந்தார். இறுதியில், அவர் சிறப்பு இடமான பாண்டா அஞ்சல் நிலையத்துக்கு வந்தார். அங்கே அவர் தனது நண்பர்களுக்கு அஞ்சல் அட்டையை அனுப்பி, தனது விருப்பத்தை நிறைவேற்றினார்.
வேகமான வாழ்க்கை முறை, இணையம், ஸ்மர்ட் செல்லிடப்பேசி உள்ளிட்ட உயர் அறிவியல் தொழில் நுட்ப பொருட்களின் பரவலுடன் தற்போது எவ்வளவு பேர் தான் பாரம்பரிய கடித முறையில் நண்பர்களுக்கு எழுதித் தொடர்பு கொள்கின்றான்? இந்த கடிதத் தொடர்பு முறை மீது மக்களின் ஆர்வம் படிப்படியாக குறைந்து வருகின்ற போதிலும், அஞ்சல் சேவை துறையினர் சிறந்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.