லீன் லெய் முதலியோரின் முயற்சியுடன், பாண்டா அஞ்சல் அலுவலகம் நிறுவப்பட்டதற்கு பிந்தைய 6 திங்கள் காலத்துக்குள், வாடிக்கையாளர்களிடையே குறிப்பிட்ட அளவு புகழ்பெற்றுள்ளது. இதுவரை, பாண்டா அஞ்சல் அட்டைகளின் விற்பனை அளவு, 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. குவெய் சோ மாநிலத்தைச் சேர்ந்த பயணி திரு ச்சோ பாண்டா அஞ்சல் நிலையத்தில் அஞ்சல் அட்டைகளைத் தெரிவுச் செய்து கொண்டிருந்தார். அவர் கூறியதாவது:
"கடந்த மூன்று நாட்களாக செங்து நகரில் பயணம் மேற்கொண்டுள்ளேன். நினைவுப் பொருட்களின் கடைகளை நாடுகின்றேன். செங்து நகரில் பாண்டா அஞ்சல் நிலையம் புகழ்பெற்றுள்ளதால் இங்கே வந்துள்ளேன். எனது குழந்தைக்கு அஞ்சல் நினைவுப் பொருட்களை வாங்க விரும்புகிறன்" என்றார் அவர்.
பாண்டா அஞ்சல் நிலையத்தின் பரப்புரை மற்றும் அஞ்சல் பொருட்களின் விற்பனையைத் தவிர, பாண்டா அஞ்சல் அலுவலகம் ஆண்டுதோறும் சிறப்பு குறுந்திரைப்படத்தைத் தயாரித்து, இணையம் மூல விற்பனையை பரப்புரை செய்கிறது. இது, அஞ்சல் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் அதேவேளையில், வாடிக்கையாளர்களுக்கு வசதியை தருகிறது. எதிர்காலத்தில் பாண்டா இணைய அஞ்சல் நிலையம் பல வடிவிலான அலுவல்களை நடத்தி, பயணிகளுக்கு மேலும் வசதியான அஞ்சல் சேவைப் பொருட்களை வழங்கும். தவிர, "செங்து நகரில் பயணம் மேற்கொள்ள பாண்டா உங்களுக்கு வழிகாட்டுவது" என்ற வரைப்படம் வெளியாகவுள்ளது. லீன் லெய் கூறியதாவது:
"செங்து நகரில் மிக புகழ்பெற்ற காட்சி தலங்கள் இந்த வரைப்படத்தில் இடம்பெறுகின்றன. பயணிகள் இவ்வரைப்படத்தில் அஞ்சல் முத்திரையிடலாம். பயணிகள் குறிப்பிட்ட அளவில் முத்திரைகளைச் சேகரித்த பிறகு, பாண்டா அஞ்சல் நிலையத்திற்கு வந்து குறிப்பிட்ட அஞ்சல் பொருட்களை இலவசமாக பெறலாம்" என்றார் அவர்.
உங்கள் நண்பர்கள் செங்து நகரிலிருந்து கொண்டு வந்த சுவையான உணவுகளை ருசித்து, நண்பர்கள் பாண்டா அஞ்சல் நிலையத்திலிருந்து அனுப்பிய அஞ்சல் அட்டையை கையில் எடுத்து சென்று, செங் து நகரின் அழகான இயற்கைக் காட்சிகளையும், அன்பான பாண்டாக்களையும் கண்டு இரசிக்கின்ற போது, செங்து பண்பாடு புதிய உயிராற்றலுடன் உங்கள் கண்களின் முன் தோன்றும். பாரம்பரிய அஞ்சல் சேவைத் துறை நவீனப் பண்பாட்டுடன் ஒன்றிணைந்து, புதிய உயிராற்றலைப் பெற்றுள்ளது.