சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் செங்து நகரில், நான்கு இளைஞர்கள் உயிராற்றல் மிக்க படைப்புத் திறனாளி குழு ஒன்றை உருவாக்கினர். அவர் மனதில் கருப்பொருளாக தோன்றிய அஞ்சல் நிலையத்தை நிறுவுவது அவர்களது கனவாகும். அவர்களது சளையாத முயற்சியுடன், பாண்டா அஞ்சல் நிலையம், கற்பனையிலிருந்து நடைமுறையாக மாறியுள்ளது. சிச்சுவான் மாநிலத்தின் செங்து நகர், பாண்டாவின் இல்லம் என அழைக்கப்படுகிறது. பாண்டா செங்து நகரின் அட்டையாளமாக திகழ்கிறது. 2013ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 9ஆம் நாள் 44வது உலக அஞ்சல் நாளாகும். உலகளவில் பாண்டாவைக் கருப்பொருளாக கொண்ட பாண்டா அஞ்சல் நிலையம் செங்து நகரில் நிறுவப்பட்டது. செங்து நகரின் அடையாளமாக இருக்கும் பாண்டா, அஞ்சல் சேவை துறைக்குப் புதிய உள்ளடக்கத்தை தந்து, பாரம்பரியப் பண்பாட்டைக் கையேற்றி பரவல் செய்வதில் மக்களின் எண்ணத்தை தூண்டி எழுப்பும் என்று பாண்டா அஞ்சல் துறைத் திட்டப்பணி குழுவின் பொறுப்பாளர் லீன் லெய் கருத்துத் தெரிவித்தார். அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:
"பாண்டா பண்பாடு, செங்து பண்பாடு மற்றும் அஞ்சல் பண்பாட்டை நன்றாக இணைப்பதன் மூலம், செங்து நகரம், சிச்சுவான் மாநிலம் ஏன் திபெத் பண்பாடு, சீனாவின் பாரம்பரிய பண்பாடுகளைப் பரவல் செய்ய விரும்புகிறோம்" என்றார் அவர்.