"பட்டுப்பாதை:தொடக்கப்பகுதி மற்றும் தியன் ஷான் இடைவழியிலுள்ள பாதை தொடரமைப்பு" உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்வதற்கான விண்ணப்பம், ஜூன் 22ஆம் நாள் கத்தாரின் தோஹா நகரில் துவங்கிய 38வது உலக மரபுச் செல்வ மாநாட்டில் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சீனா, கிர்கிஸ்தான், கசகஸ்தான் கூட்டாக விண்ணப்பித்து வழங்கிய இந்த பண்பாட்டு மரபுச் செல்வத் திட்டப்பணி, உலக மரபுச் செல்வப் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது.
உலக மரபுச் செல்வ மாநாடு, யுனேஸ்கோ அமைப்பின் கீழுள்ள உலக மரபுச் செல்வக் குழுவின் ஆண்டு மாநாடாகும். இம்மாநாடு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.