• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பட்டுப்பாதை திட்டப்பணி
  2014-08-28 10:25:44  cri எழுத்தின் அளவு:  A A A   

பட்டுப் பாதை திட்டப்பணி உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது, மகிழ்ச்சி தருகிறது என்ற போதிலும், இந்த உலக மரபுச் செல்வம் மீதான பாதுகாப்பு மேலும் முக்கியமாக இருக்கிறது என்று Du Yue தெரிவித்தார். மேற்கூறிய மூன்று நாடுகளும் ஒத்துழைப்பை நெருக்கமாக்கி, தொல் பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீதான பாதுகாப்புக் கருத்தை உயர்த்தி, முழுமையான, உயிருடன் கூடிய பட்டுப்பாதை பண்பாட்டைப் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து கையேற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

38வது உலக மரபுச் செல்வ மாநாட்டில் கலந்து கொண்ட சீனத் தேசிய பண்பாட்டு மரபுச் செல்வப் பணியகத்தின் துணை தலைவர் Tong Ming Kang பேசுகையில், உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்வதற்கு பட்டுப் பாதை திட்டப்பணியின் விண்ணப்ப ஆயத்தப் பணி 1998ஆம் ஆண்டு துவங்கியது என்றார். ஒருங்கிணைப்பு மூலம், சீனா, கிர்கிஸ்தான், கசகஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் 2013ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் யுனேஸ்கோ அமைப்பின் கீழுள்ள உலக மரபுச் செல்வ மையத்துக்கு விண்ணப்ப அறிக்கையை ஒப்படைத்தது என்று அவர் தெரிவித்தார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040