• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பட்டுப்பாதை திட்டப்பணி
  2014-08-28 10:25:44  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வரலாற்றில் பல வம்சங்களின் தலைநகரான சாங் ஆனிலிருந்து, மத்திய ஆசிய நாடுகள் வரையான பட்டுப்பாதையிலுள்ள அதிகமான தொல் பொருட்கள், சிதிலங்கள் மற்றும் இயற்கைக் காட்சிகள் பட்டுப் பாதை திட்டப்பணியில் இடம்பெறுகின்றன என்றும், அதிக வகைகளைச் சேர்ந்த தொல் பொருட்களும், சிதிலங்களும், உலகளவில் மிகவும் அரியதாக காணப்பட்டுள்ளன என்றும், சீனாவைச் சேர்ந்த யுனேஸ்கோ அமைப்பின் தேசியக் குழுவின் தலைமைச் செயலாளர் Du Yue செய்தியாளரிடம் தெரிவித்தார். பட்டுப் பாதைத் திட்டப்பணி உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது, சீனாவின் மிக பல தொல் பொருள் துறை பணியாளர்கள் மற்றும் பண்பாட்டுப் பணியாளர்களின் பல்லாண்டுக்கால விருப்பத்தை நனவாக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் தோன்றும் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு பேரெழுச்சிக்கும், உள்ளூர் சுற்றுலா பொருளாதார வளர்ச்சிக்கும் இது ஆக்கப்பூர்வ முக்கிய பங்காற்றும். உலக நிலை பட்டுப் பாதை பண்பாட்டு மரபுச் செல்வம் மேலும் செவ்வனே பாதுகாக்கப்படும். இந்த திட்டப்பணி உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது, சீனா, கிர்கிஸ்தான், கசகஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கிடை பண்பாட்டுப் பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்தி, தொல் பொருள் பாதுகாப்புத் துறையில் இம்மூன்று நாடுகளின் ஒத்துழைப்பை இத்திட்டப்பணி விரிவாக்கும். இம்மூன்று நாடுகளின் மக்கள், பட்டுப் பாதையின் நெடுகிலுள்ள நாடுகளின் மக்கள், ஏன் உலக மக்களுக்கிடையே நட்பார்ந்த பரிமாற்றத்தை இது நெருக்கமாக்கும் என்று Du Yue தெரிவித்தார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040