முன்பு, தமது குடும்பத்தின் பாரம்பரிய சிறப்பு கைவினை நுட்பத்தை பராமரிக்கும் பொருட்டு, ச்சாங் குடும்பத்தைச் சேர்ந்த மங்கையர்கள் திருமணம் செய்யாது. வாழ்நாள் முழுவதிலும் அவர்கள் அயராது உழைத்தனர். இருப்பினும் அவர்கள் மனவருத்தம் அடையவில்லை.
இந்த கைவினை கலை நுட்பம், குடும்பத்தின் தொழிற்கூடத்தில் ஒருவரின் கைவேலையாகவே இருப்பதால், காலப்போக்கில், தற்போது, இது அழியும் அபாயத்தில் உள்ளது. பெய்சிங் மாநகராட்சி நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் துணை தலைவர் Yu Zhi Hai இது பற்றி கூறியதாவது:
"பொருட்காட்சி, கருத்தரங்கு, வெளிநாட்டில் பரிமாற்றம், கருத்தரங்கு ஆகியவற்றை நடத்துவதன் மூலம் நாட்டுப்புற கலையைப் பாதுகாத்து வளர்த்துள்ளோம். நாட்டுப்புற கலைக்கான பெய்சிங் மாநகராட்சியின் முதலீடு, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றது. தவிர, இளம் கலைஞர்கள் வளர்க்க பல்கலைக்கழகங்களில் பாடம் சொல்லிக்கொடுக்கின்றோம். இதன் மூலம் மேலும் அதிகமான இளைஞர்கள், நாட்டுப்புற கலையை அறிந்து கொள்ளச் செய்திடுகின்றோம்" என்றார் அவர்.
பல துறைகளின் உதவியுடன், தனித்தன்மை வாய்ந்த நாட்டுப்புறக்கலை படிப்படியாக மீட்சியடைந்து பயனுள்ள முறையில் பாதுகாக்கப்படுகின்றது.