• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தனிச்சிறப்பு வாய்ந்த உய்கூர் இனக் கைவினை கலை
  2014-10-20 16:26:46  cri எழுத்தின் அளவு:  A A A   

பட்டுப் பாதை பொருளாதார மண்டல உருவாக்கத் திட்டப்பணியை பற்றி அகாஹான் அம்மையார் அறிந்து கொண்டார். இது, தமது குடும்பத்தினருக்கு வாய்ப்பை தரும் என்று அவர் கருத்து தெரிவித்தார். சின்ச்சியாங்கிற்கு வருகை தரும் பயணிகள் அதிகரிப்பதுடன், தமது கூட்டு நிறுவனத்தின் தொப்பிகள் மேலும் நன்றாக விற்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அவரது தாயுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மெஹ்முடியின் சிந்தனை நவீனமயமாகியுள்ளது. அவர் இணையம் மூலம் ஆடை பொருட்களை விற்பனை செய்கின்றார்.

கடந்த ஆண்டு, மெஹ்முடியின் கூட்டு நிறுவனத்தின் வர்த்தக தொகை, 7 லட்சத்து 20 ஆயிரம் யுவானாகும். இதன் லாபம், 40 ஆயிரம் யுவானை எட்டியுள்ளது. இவ்வாண்டு இக்கூட்டு நிறுவனத்தின் வர்த்தக தொகை, பத்து லட்சம் யுவானை எட்டக்கூடும். எதிர்கால வளர்ச்சித் திட்டம் பற்றி அவர் தெரிவித்தார். மூன்று கணிணி பூத்தையல் வேலை தொடர் அமைப்புகளை கொண்டுள்ள தொழிற்சாலையின் நிலப்பரப்பு, ஆயிரம் சதுர மீட்டராக அதிகரிக்கவும், மேலதிக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தவும், அவர்களுக்கு கணிணி மூலம் பூத்தையல் நுட்பத்தைக் கற்றுக்கொடுக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

எதிர்காலத்தில், இக்கூட்டு நிறுவனத்தின் ஆண்டு வருமானம், 40 லட்சத்தை எட்டும் என்பதில் ஐயமில்லை என்று மெஹ்முடி நம்பிக்கையுடன் தெரிவித்தார். அழகான உய்கூர் இன ஆடைகள் அவரது சுய நம்பிக்கைக்குக் காரணமாகும். உய்கூர் இன மக்களைத் தவிர, மேலதிக தேசிய இன மக்கள் தலைசிறந்த தொப்பிகளையும், வண்ணமயமான உடைகளையும் நேசிப்பர் என்று நம்புகின்றோம்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040