மலர்கள் எனும் சு நன் சிறுபான்மை தேசிய இன குழந்தைகள் கூட்டு இசைக்குழு, லன் சோ பல்கலைக்கழகத்தின் ஒரு பொது நலன் சமூக நிறுவனம் நடத்தும் ஒரு பொது நலன் தி்ட்டப்பணியாகும். இக்கூட்டு இசைக் குழுவில், சிறுபான்மை தேசிய இனக் குழந்தைகள், மகிழ்ச்சியான, தாராளமான சூழலில் தங்களது தேசிய இன மொழி மற்றும் பண்பாட்டை சுய விருப்பத்துடன் கற்றுக்கொண்டு, கையேற்றுவதை விரைவுபடுத்துவது, இத்திட்டப்பணியின் நோக்கமாகும். 2010ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் கோடைக்கால விடுமுறை நாட்களில், சு நன் மாவட்டத்தில் யு கு இன நாட்டுப்புறப் பாடல்கள் படிப்பு வகுப்பை இக்கூட்டு இசை குழு நடத்துகிறது. இவ்வகுப்பில் துவக்க நிலைப் பள்ளி மாணவர்கள் யு கு இன மொழி மற்றும் நாட்டுப்புறப் பாடல்களைக் கற்றுக்கொள்கின்றனர். லன் சோ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் யாங் லீங் தொண்டராக இந்நடவடிக்கையில் கலந்து கொள்கிறார். இவ்வகுப்பின் பாடத்திட்டம், மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது என்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"முதலாவது பகுதி பாடங்களில், மாணவர்களுக்கு யூ கு இன மொழியின் அடிப்படை சொல்களைக் கற்றுக்கொடுகின்றோம். எடுத்துக்காட்டாக, குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், எண்ணிக்கை, காலநிலை மற்றும் விலங்குகள் தொடர்பான சொற்கள். இரண்டாவது பகுதி பாடங்களில், யு கு இன நாட்டுப்புறக் குழந்தைப் பாடல்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறோம். மூன்றாவது பகுதி பாடங்களில், யு கு இன மொழி உச்சரிப்புக்கிணங்க, சில குறுகிய நாடகங்களை இயற்றுமாறு மாணவர்களை ஊக்குவிக்கிறோம். மாணவர்கள் அரங்கில் இந்நாடகங்களை அரங்கேற்றுகின்றனர்" என்றார் அவர்.