"குவாங் மெய் இசை நாடகத்தின் ஊர் என்று அழைக்கப்படும் அன்குவெய் மாநிலத்தின் சியன் ஷான் மாவட்டத்தில் நான் பிறந்து வளர்ந்தேன். எனக்கு 10 வயதாக இருந்த போது, அன் சிங் நகருக்கு வந்தேன். அன் சிங்கில் 30 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளேன். இந்த 30 ஆண்டு்க்காலம், சீனாவில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைக்கு வர தொடங்கியது முதல் இது வரையான காலமாகும். இக்காலத்தில் சீனாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டு, பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளது. குவாங் மெய் இசை நாடகத் துறையில் ஊன்றி நிற்கின்றேன். குவாங் மெய் இசை நாடகத்தை நேசிக்கின்றேன். இந்த இசை நாடகம், மிகவும் அருமையான வகையாகும். எங்கள் முயற்சிகளின் மூலம், இந்த நாடகத்தின் ஒளிவீசும் வளர்ச்சியைத் தூண்டி, இத்தலைசிறந்த பண்பாட்டைக் கையேற்ற விரும்புகின்றேன்" என்றார் அவர்.
நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, சீனாவின் குவாங் மெய் இசை நாடகக் கலைஞர் ஹான் ச்செய் ஃபெங் அம்மையாரின் கூற்று ஆகும். ஹான் ச்செய் ஃபெங் அம்மையார், சீனாவின் தேசிய நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வத் திட்டப்பணியின் வாரிசு ஆவார்.
குவாங் மெய் இசை நாடக வளர்ச்சியின் தொடக்கக்காலத்தில் குவாங் மெய் தியாவ் அல்லது தேயிலை பறிப்பு இசை நாடகம் என அழைக்கப்பட்டது. குவாங் மெய் இசை நாடகம், பீக்கிங் இசை நாடகம், Yue இசை நாடகம், பிங் இசை நாடகம், Yu இசை நாடகம் ஆகியவை, சீனாவின் 5 புகழ் பெற்ற இசை நாடகங்கள் என போற்றப்படுகின்றன. சிங் வம்சத்தின் இடைக்காலத்தில் குவாங் மெய் இசை நாடகம், அன்குவெய், ஹு பெய், ஜியாங் சி ஆகிய பிரதேசங்களில் தோன்றியது. அன்குவெய்வின் அன் சிங்வில் இது விறுவிறுப்பாக வளர்ந்துள்ளது. குவாங் மெய் இசை நாடகம் என்பது, நடனமும், பாடல் பாடுவதும் ஒன்றிணைந்த இசை நாடக அரங்கேற்ற வடிவமாகும். நடனம் ஆடுவதிலும், பாடல் பாடுவதிலும், அரங்கேற்றுபவர், ஆழ்ந்த அடிப்படை கலைத் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.