சீனாவின் குவாங் மெய் இசை நாடகத்தின் வாரிசாக, ஹான் ச்செய் ஃபெங் அம்மையார் இந்த இசை நாடகத்தின் மீது அதிக நேசம் கொண்டுள்ளார். சிறு வயதிலிருந்தே அவர் இந்த நாடகத்துடன் ஆழ்ந்த தொடர்பு கொண்டுள்ளார். அவரைப் பொறுத்த வரை, குவாங் மெய் இசை நாடகத்துக்கு பெரும் ஈர்ப்பு ஆற்றல் உண்டு. நீண்டக்காலமாக, அவர் அன் சிங் நகரில் இந்த இசை நாடகத்தின் வளர்ச்சியைத் தூண்டப் பாடுபட்டு வருகிறார். அன் சிங்வில் குவாங் மெய் இசை நாடகத்தின் வளர்ச்சி, ஹான் ச்செய் ஃபெங் அம்மையாரின் முயற்சிகளிலிருந்து பிரிக்கப்பட முடியாது.
குவாங் மெய் இசை நாடகம், நாட்டுப்புறக் கலையாகும். இது பொது மக்களிடையே தோன்றி, வளர்ச்சியடைந்து வந்துள்ளது. இது வரை இந்த இசை நாடகம் தோன்றிய இடம் உறுதிப்படுத்தப்படவில்லை. அன் சிங் நகரின் குவாங் மெய் இசை நாடக அருங்காட்சியகத்தின் பணியாளர் ஒருவர் கூறியதாவது:
"ஹுபெய்வில் குவாங் மெய் இசை நாடகம் தோன்றியது என்று பலர் கருதுகின்றனர். அன் சிங்வில் இந்த இசை நாடகம் தோன்றியது என்று பலர் கருதுகின்றனர். ஹுபெய் மாநிலத்தில் குவாங் மெய் மாவட்டம் அமைந்துள்ளது. உள்ளூர் மக்கள் தேயிலை பறித்தல் துறையில் முக்கியமாக ஈடுபடுகின்றனர். அவர்கள் மலையில் தேயிலை பறிக்கும் போது இயற்றிய இசை, குவாய் மெய் இசை நாடகம் என்றும் பலர் கூறுகின்றனர்" என்றார் அவர்.