• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யாவ் இனத் துணி கைவினைக் கலை கையேற்றல்
  2015-02-03 16:48:58  cri எழுத்தின் அளவு:  A A A   

சாவோ பெங் க்ஸ்யாங் அம்மையார், இக்கடையின் உரிமையாளர் ஆவார். யாவ் இனத் துணி பின்னல் மற்றும் பூத்தையல் கைவினைக் கலை, குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு மே திங்கள், சாவோ பெங் க்ஸ்யாங் அம்மையார், இக்கலையின் வாரிசு என தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், யாவ் இனத்தின் "பான் யாவ்" என்னும் ஒரு கிளையைச் சேர்ந்தவர். அவர் யாவ் இனத்தின் ஐந்து கிளைகளுக்குரிய உருவங்களைப் பின்னி, பூவேலை செய்வதில் தேர்ச்சி பெற்றுள்ளார். இது மக்களுக்கு மகிழ்ச்சி தருகிறது.

அனைத்து உருவங்களும் வாய் மற்றும் நினைவு மூலம் கையேற்றப்பட்டுள்ளன. எனது நினைவில் சுமார் 30 உருவ வகைகள் பதிந்துள்ளன என்று சாவோ பெங் க்ஸ்யாங் அம்மையார் தெரிவித்தார். அவருக்கு 7 வயதாக இருந்த போது, தாயிடமிருந்து பின்னல் மற்றும் பூத்தையல் கைவினை நுட்பத்தைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார். 15 வயதாக இருந்த போது, அவர் யாவ் இனத் துணி பின்னல் மற்றும் பூத்தையல் நுட்பத்தை முற்றிலும் கைதேர்ந்தார். அவரது தாயுடன் ஒரே காலத்தில் வாழும் மகளிர் அனைவரும் யாவ் இனத் துணி பின்னல் மற்றும் பூத்தையல் நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று சாவோ பெங் க்ஸ்யாங் தெரிவித்தார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040