யாவ் இனத் துணி பின்னல் மற்றும் பூத்தையல் நுட்பத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கையேற்றும் விருப்பத்தை நனவாக்கும் பொருட்டு, டா சாங் துவக்க நிலைப் பள்ளியின் மாணவர்களுக்கு இந்த கைவினை நுட்பத்தை இலவசமாக கற்றுக்கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். யாவ் இனத் துணிகள் அதிக வகைகளைச் சேர்ந்தவை. வண்ணமயமானவை. தனி்ச்சிறப்பு வாய்ந்தவை. பல்வகை உருவங்கள் செழிப்பான கருப் பொருளை வெளிப்படுத்துகின்றன என்று சாவோ பெங் க்ஸ்யாங் அம்மையார் தெரிவித்தார்.
மனைவி சாவோ பெங் க்ஸ்யாங் யாவ் இனத் துணி பின்னல் மற்றும் பூத்தையலில் ஈடுபடுகின்றார் என்றும், இக்கைவினைக் கலையின் வாரிசாக, மூதாதையர் கையேற்றி வரும் கைவினை கலையை அடுத்த தலைமுறையினருக்கு தொடர்ந்து கையேற்ற விரும்புவதாகவும் சாவோ பெங் க்ஸ்யாங்கின் கணவர் சாவோ ஜின் லிங் தெரிவித்தார்.
சாவோ பெங் க்ஸ்யாங்கின் கடையில், நெசவுத்தறி வைக்கப்படுகின்றது. இந்நெசவுத் தறியில் பின்ன முடிந்தாத ஒரு யாவ் இன துணி துண்டு விரிவாக்கப்படுகின்றது. சாவோ பெங் க்ஸ்யாங் அம்மையார் பின்னிக்கொண்டிருந்த போது, துணி பின்னல் மற்றும் பூத்தையல் கைவினைக் கலை அழியாமல் தவிர்த்து, இதைக் கையேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.