• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கூடைப்பந்து வீர்ர் யாவ் மிங்
  2015-02-04 15:41:57  cri எழுத்தின் அளவு:  A A A   

2003 முதல் 2008ஆம் ஆண்டு வரையான 6 விளையாட்டு தொடர்களிலும் அவர் என்பிஏ மேற்குப் பகுதி நட்சத்திர அணியில் சேர்க்கப்பட்டார். 2009ஆம் ஆண்டு யாவ் மிங் சீன ஷாங்காய் கூடைப் பந்து அணியை வாங்கி, ஷாங்காய் ஷாக் கூடைப் பந்து கிராபின் தலைமை இயக்குநராக மாறினார்.

2011ஆம் ஆண்டு ஜுலை திங்கள் 20ஆம் நாள் கூடைப் பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதென அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 2013ஆம் ஆண்டு சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12வது கமிட்டியின் உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

• கூடைப் பந்து துறையில் யாவ் மிங் அதிக சாதனைகளைப் புரிந்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல், சமூக நல இலட்சியத்திலும் அவர் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருகின்றார். 2007ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் அவரும் என்பிஏ ஹியுஸ்டன் ராக்கெட் அணியில் அவரோடு விளையாடிய அவரது சக உறுப்பினர் ஸ்டீப் நாஷும் இணைந்து பெய்ஜிங்கில் அறக்கொடைக்காக கூடைப் பந்து போட்டி ஒன்றை ஏற்பாடு செய்தார். ஏமன்டியா எனப்படும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான உலகச் சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி யாவ் மிங்கின் சொந்த ஊரான ஷாங்காயில் 2007ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் நடைபெற்றது. அதன் துவக்க விழாவில் கலந்து கொள்வதற்காக யாவ் மிங் சிறப்பாக அமெரிக்காவிலிருந்து ஷாங்காய்க்கு திரும்பினார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040