• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு சீனாவின் ஆயத்தம்
  2015-02-16 14:50:05  cri எழுத்தின் அளவு:  A A A   

24வது குளிர்கால ஒலிம்பிக்ப் விளையாட்டுப் போட்டி 2022ஆம் ஆண்டு நடைபெறும். அதனை நடத்த கசகஸ்தானின் அல்மேட்டியும் சீனாவின் பெய்ஜிங்கும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளன. 2015ஆம் ஆண்டு ஜுலை திங்கள் 31ஆம் நாள் இப்போட்டியை நடத்தும் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்படும்.

பைஸ்ரோன் கூட்டணி, 7 தனி விளையாட்டுகளின் சர்வதேசச் சம்மேளனங்கள் ஆகியவை சீனாவின் பெய்ஜிங், சாங் ச்சியா காவ் ஆகிய இடங்களில் இப்போட்டியை நடத்தும் சூழ்நிலையை சோதனையிட்டன. இவ்வாண்டு நவம்பர் திங்கள் 19ஆம் நாள் அவற்றின் சோதனைப் பணி முடிவடைந்தது. இவ்விரு நகரங்களில் பனி தொடர்பான விளையாட்டுத் திடல்கள் அல்லது அரங்குகளின் வசதிகள் உயர்வாகப் பாராட்டைப் பெற்றுள்ளன.

நவம்பர் 22ஆம் நாள் சாங் ச்சியா காவ் நகரிலுள்ள ஒரு பனி சறுக்கு விளையாட்டு திடல் நடப்பு ஆண்டில் துவக்கப்பட்டுள்ளது. மிக அதிக பனி விளையாட்டு ரசிகர்கள் இங்கு வந்துள்ளனர்.

இந்த விளையாட்டு திடலின் இயக்குநர் செங் யேன்யேன் அம்மையார் கூறியதாவது

கடந்த ஆண்டும் அதிக ரசிகர்களை வரவேற்றுள்ளோம். வார இறுதியில் மக்கள் கொஞ்சம் கூடுதலாக வருவர். கடந்த ஆண்டின் குளிர்காலத்தில் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மக்களை வரவேற்றுள்ளோம் என்றார் அவர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040