சாவ் சிங் அம்மையார் ஓவிய சிறப்பு தொழில் பயிற்சியைப் பெறவில்லை. மூன்று ஆண்டுக்காலத்தில் அவர் ஓவியக் கலையைக் கற்றுக்கொண்டு, ஓவியக் கண்காட்சியை நடத்தினார். இது, அவரது விடா முயற்சியை காட்டுகிறது. சாவ் சிங் அம்மையார் கூறியதாவது:
"நாள்தோறும் அதிக நேரம் ஓவியம் வரைந்தேன். முன்பு நடனப் பயிற்சியில் அதிக முயற்சி மேற்கொண்டேன். ஓவியம் வரைவதில் விடாமுயற்சி மேற்கொண்டுள்ளேன். நாள்தோறும் காலை முதல் இரவு வரை, குறைந்தது 8 மணி நேரம் வரைவேன்" என்றார் அவர்.
கலை பாதையில் அவர் முன்னேறுவதற்கு ஊக்கம் என்ன? கலையானது, வெளிநாட்டுப் பரிமாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது என்றும், இது ஒரு நாட்டின் நாகரீகம் வளர்ச்சியடையும் சின்னமாகும் என்றும் சிறு வயதிலிருந்தே அறிந்து கொண்டுள்ளதாக சாவ் சிங் அம்மையார் தெரிவித்தார். இச்சின்னத்துக்கு சாவ் சிங் அம்மையார் வெளிநாட்டில் நிகழ்ச்சியை அரங்கேற்றிய போதெல்லாம், தாய்நாட்டுக்கு புகழை அதிகரிக்கும் கடமை தமக்கு உண்டு என்று அவர் கருதினார். அவருக்கு வயதாகி விட்டதால், அவர் நடன வடிவத்தில் கலையை வெளிப்படுத்த முடியாமல் போயிற்று. பின்னர் அவர் ஓவியம் வரைவதைத் தெரிவு செய்தார். சாவ் சிங் அம்மையார் கூறியதாவது:
"தாய்நாடு, தாய்நாட்டவர், தலைசிறந்த கலைஞர்கள் ஆகியோர் எனக்கு வழங்கியக் கலை திறனை அடுத்த முறையினருக்குக் கையேற்ற விரும்புகிறேன்" என்றார் அவர்.