சக்திவேல்....... இன்றைக்கு, உருளைக்கிழங்கைப் பயன்படுத்திச் சமைக்கும் மற்றொரு பொரியலை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.
ஜெயா.......ஆமாம், சீன மொழியில் அதன் பெயர் டீசான்சியான்.
சக்திவேல்....... தமிழில் உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் மற்றும் பச்சை மிளகாய் கலந்த பொரியலாகும்.
ஜெயா....... இந்த பெயரைக் கேட்ட பின், இந்த பொரியலைச் சமைப்பதற்குத் தேவைப்படும் பொருட்கள் என்னவென்பது தெளிவாகப் புரிகிறது அல்லவா.
சக்திவேல்....... ஆமாம். இந்த மூன்று வகை காய்கள், தமிழ் நாட்டில் அன்றாட பயன்பாட்டுக் காய்கறிகளாக இருக்கின்றன.
ஜெயா....... ஆமாம். குழம்பு சமைக்கும் போது இவை முக்கிய காய்களாக இருக்கின்றன அல்லவா?
சக்திவேல்....... சரி, இப்பொரியலைச் சமைப்பதற்கு, 2 உருளைக்கிழங்கு, 2 கத்திரிக்காய் மற்றும் 1 மிளகாய் தேவை.
ஜெயா....... மேலும் தேவையான பொருட்களை உங்களுக்குக் கூறுகிறோம். குறித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே.
சக்திவேல்.......எண்ணெய் தேவையளவு, மிதமான சோயா சாறு ஒரு கரண்டி, உப்பு ஒரு சிறிய கரண்டி, இஞ்சி சில சிறிய துண்டுகள், சர்க்கரை ஒரு சிறிய கரண்டி ஆகியவையும் இப்பொரியலுக்கு தேவைப்படுகின்றன.