ஜெயா....... தேவையான பொருட்கள் தயார். இப்போது ஆயத்தப் பணிக்குப் போகலாம் சரியா.
சக்திவேல்.......சரித்தான், முதலாவதாக, உருளைக்கிழங்கின் தோலை நீக்க வேண்டும்.
ஜெயா.......பிறகு, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், மிளகாய் ஆகியவற்றை நீரில் சுத்தம் செய்து, முக்கோண வடிவத்தில் துண்டுகளாக வெட்டுங்கள்.
சக்திவேல்.......இஞ்சி துண்டுகள், மேலும் சிறிய தூண்டுகளாக வெட்ட வேண்டும்.
ஜெயா.......ஆமாம், இப்போது, ஆயத்த பணி முடிந்தது. சமைக்கத் துவங்கலாம்.
சக்திவேல்.......சரி, முதலில், வாணலியில் எண்ணெயை ஊற்றி, சூடாக்குங்கள்.
ஜெயா.......சூடான எண்ணெயில் உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு வேக வையுங்கள்.
சக்திவேல்.......உருளைக்கிழங்கு துண்டுகளின் மேற்புறம் பொன் நிறமாக மாறிய போது, வெளியே எடுங்கள்.
ஜெயா.......இப்போது, கத்திரிக்காய் துண்டுகளை கொஞ்சம் நேரம் எண்ணெய்யில் வேக வைத்து, வெளியே எடுங்கள்.
சக்திவேல்.......பிறகு, வாணலியிலுள்ள எண்ணெயை வெளியே ஊற்றி, வாணலியில் கொஞ்சம் எண்ணெயை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஜெயா.......ஆமாம், இஞ்சி மற்றும் மிளகாய் துண்டுகளையும், வாணலியில் வதக்குங்கள்.
சக்திவேல்....... வாசனை வரும் போது, உருளைக்கிழங்கையும், கத்திரிக்காயையும் வாணலியில் போட்டு கூட்டாக வதக்குங்கள்.
ஜெயா.......கடைசியில், மிதமான சோயா சாறு, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை வாணலியில் வைத்து, தொடர்ந்து சூடாக்குங்கள்.
சக்திவேல்.......சரி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் மற்றும் மிளகாய் பொரியல் தயார்.