ஜெயா....... அனைத்துத் தேவையான பொருட்கள் தயாராக இருக்கின்றன. இனி ஆயத்தப் பணிக்குப் போகலாம். அல்லவா.
சக்திவேல்.......ஆமாம், போகலாம். முதலில், பச்சை கோழி இறகு பகுதியின் மேல் இரண்டு கோடுகளை கத்தியால் போடுங்கள். 2 கரண்டி சோயா சாறு மற்றும் 2 கரண்டி சமையல் மதுவில் போட்டு, 2 மணி நேரத்துக்கு மேல் ஊற வைக்க வேண்டும்.
ஜெயா.......நேரம் இருந்தால், இந்த படியை, சமைக்கும் முன்புடைய இரவில் செய்தால், மேலும் நன்றாக இருக்கிறது.
சக்திவேல்.......ஆமாம், இப்போது, வாணலியில் தண்ணீர் ஊற்றி, பச்சை வெங்காயம் மற்றும் இஞ்சித் துண்டுகளைப் போடுங்கள்.
ஜெயா....... கோழி இறகுகளை தண்ணீரில் போட்டு, கொஞ்சம் அவித்த பிறகு, குளிர் நீரில் சுத்தம் செய்து, பக்கத்தில் போடுங்கள்.
சக்திவேல்.......இப்போது, ஆயத்த பணி முடிந்தது, சமைக்கப் போகலாமா?
ஜெயா.......போகலாம். முதலில், அடுப்பின் மேல், சிறிய தீயிலுள்ள வாணலியில், கொஞ்சம் எண்ணெயை ஊற்றி, காய்ந்த கோழி இறகுகளை வேக வையுங்கள்.
சக்திவேல்.......இறகுகளின் மேற்புறம், பொன் நிறமாக மாறிய பின், கோக கோலா, ஒரு கரண்டி சமையல் மது, ஒரு கரண்டி சோயா சாறு, 2 கரண்டி மிதமான சோயா சாறு, தேவையளவிலான உப்பு ஆகியவற்றைப் போட்டு வதக்குங்கள்.
ஜெயா....... வாணலியிலுள்ள சூப், அடர்த்தியாக மாறுவதுடன், இந்தப் பொரியல் தயார்.