முன்பு அதிகமான ச்சுவான் இன பெண்களைப் பொறுத்த வரை, ச்சுவான் இனச் சித்திர வேலைப்பாட்டுத் துணி பின்னல் நுட்பம், இன்றியமையாத அடிப்படை தொழில் நுட்பங்களில் ஒன்றாக இருந்தது. பெண்கள் அனைவரும் இதை கற்று தேர்ந்திருந்ததால், ச்சுவான் இனச் சித்திர வேலைப்பாட்டு துணி பின்னல் நுட்பத்தின் வளர்ச்சி தூண்டப்பட்டது. விவேக மிக்க மங்கையர், அவர்களது ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொண்டிருந்த அடிப்படை தொழில் நுட்ப திறனில் வாழ்க்கை பற்றிய அவர்களது உணர்வுகளை சேர்த்து, ச்சுவாங் இனச் சித்திர வேலைப்பாடுடைய துணி பின்னல் நுட்பத்தின் வளர்ச்சியைத் தூண்டியுள்ளனர். ஆனால், தற்கால சமூகத்தில், ச்சுவாங் இனச் சித்திரத் வேலைப்பாட்டுத் துணி பின்னல், மக்களின் வாழ்க்கை முறையாக இருப்பதில்லை. ச்சுவாங் இன சித்திர வேலைப்பாட்டுத் துணி, ச்சுவான் இனக் கைவினைப் பொருளாக மட்டுமே மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நவீன நெசவுத் தொழிலின் தீவிரமான வளர்ச்சியுடன், பல்வகை தரமிக்க நெசவுப் பொருட்கள் அடுத்தடுத்து தோன்றியுள்ளன. அன்றாட வாழ்க்கையில், ச்சுவாங் இன சித்திர வேலைப்பாட்டு துணியின் தேவை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த அரிய ச்சுவாங் இனக் கைவினை துணி பின்னல் தொழில் நுட்பத்தை பாதுகாத்து, கையேற்றுவது, உடனடி கடமையாக மாறியுள்ளது.