ச்சுவாங் இன சித்திர வேலைப்பாட்டு துணியின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில், திறமைசாலிகள் மிக முக்கியமாகும். தற்போது, ச்சுவாங் சித்திர வேலைப்பாட்டு துணி பின்னல் திறனில் தேர்ச்சி பெற்ற மகளிரில் சிலரின் வயது, 80ஐத் தாண்டியுள்ளது. துணி பின்னுவது, மக்களின் பொறுமையையும் கவனத்தையும் சோதனை செய்யும் பணியாகும். போட்டிகள் தீவிரமாக இருக்கும் சந்தைப் பொருளாதாரத்தில், ச்சுவாங் இனச் சித்திர வேலைப்பாட்டு துணியின் பொருளாதார பயன் மிகவும் குறைவு. அதனால் இளைஞர்கள் ச்சுவாங் இன சித்திர வேலைப்பாட்டுத் துணி பின்னல் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள விரும்பவில்லை. அதனால் இந்த பின்னல் நுட்பத்தை கையேற்று கொண்டு செல்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.