"பண்டைக்காலம் தொட்டு, தான் செள பாடல் கடல் என புகழ்ந்து அழைக்கப்படுகிறது
நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டு இரசித்து, வண்ணமயமான மலர்கள் மலர்கின்றன
தான் செளவில் அனைவரும், நாட்டுப்புறப் பாடகரே
தான் செள முழுவதிலும் நாட்டுப்புறப் பாடல்கள் நிறைந்துள்ளன" என்பது ஒரு கவிதையின் உள்ளடக்கமாகும்.
ஹெனான் தீவின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தான் செள, நீண்டக்கால வரலாறுடையது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், மேற்கு ஹான் வம்சத்தின் வூ தி என்னும் பேரரசர் ஆட்சி புரிந்த காலத்தில், தான் செள, ஹான் வம்ச ஆட்சியின் கீழ் வந்தது. வட சுங் வம்சத்தின்போது, புகழ்பெற்ற இலக்கிய மேதை சு துங் போ டான் சோவில் தங்கியிருந்தார். அவர் தான் இங்கே பண்பாடுகளைப் பரவல் செய்தார். இதனால் பண்டைக்காலம் தொட்டு, தான் செள, "கவிதைகள் மற்றும் பாடல்களின் கடல்" என அழைக்கப்படுகிறது.