அப்போது ஹெயாங் யாங்கோ பரவி வந்தது, பலியிடும் விழாவிலிருந்து பிரிக்கப்பட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஹெயாங் பிரதேசத்தின் நாட்டுப்புறப் பழக்க வழக்கத்துக்கிணங்க, சீனாவின் பாரம்பரிய சந்திர நாட்காட்டியின் படி ஜனவரி திங்கள் 11ஆம் நாள் பயிர் கடவுளுக்கு பலியிடும் விழா நடைபெற்றது. அமோக அறுவடையைப் பெற இறைவேண்டல் செய்யும் வகையில், இந்நாளில் உள்ளூர் மக்கள் யாங்கோ நடனத்தை அரங்கேற்றினர். தவிர, சந்திர நாட்காட்டியின்படி, ஜனவரி திங்கள் 15ஆம் நாள் விளக்கு விழாவின்போது, யாங்கோ நடன அரங்கேற்றம், உள்ளூர் பிரதேசத்தில் இன்றியமையாத நடவடிக்கையாகும். சீனச் சந்திர நாட்காட்டியின்படி, ஏப்ரல் திங்கள் உள்ளூர் மக்கள் வேளாண் உழைப்பில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதற்கு முன், ஹெயாங்கின் பல்வேறு இடங்களில் யாங்கோ நடனத்தை மக்கள் அடிக்கடி அரங்கேற்றுவதுண்டு.
செழிப்பான அம்சங்களையும், பல்வகை வடிவங்களையும் கொண்ட ஹெயாங் யாங்கோ, உள்ளூர் மக்களின் விவேகத்தையும், கலைத் திறனையும் முழுமையாக வெளிப்படுத்துகிறது. இது, சீனப் பாரம்பரியப் பண்பாடு மற்றும் ஹெயாங் பண்பாட்டின் தலைசிறந்த கனியாகும். இது சீனத் தேசிய பண்பாட்டைப் பரவல் செய்வதற்கு ஆக்கப்பூர்வ பங்காற்றியுள்ள அதேவேளையில், பல கலை வடிவங்களில் ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது.