ஹெயாங் யாங்கோ நடன அரங்கேற்றம் ஒன்றில், முரசு மற்றும் பெருவட்ட மணி ஒலிகள் கேட்டதும், சுமார் 40 யாங்கோ நடன கலைஞர்கள், ஆடத் துவங்குகின்றனர். இது பல்லாயிரக்கணக்கான குதிரைகள் பாய்ந்து செல்வது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இந்த யாங்கோ நடனக் கலைஞர்கள், சில சமயம் வேகமாகவும், சில சமயம் மெதுவான தாளத்தில், முன்னும் பின்னும் இடதும், வலதும் பாய்ந்து ஆடுவது கண்கொள்ளா காட்சியாகும்.
ஹெயாங் நகரின் பண்பாட்டு மையத்தின் முன்னாள் தலைவர் வாங் ஜின் ச்சாவின் அறிமுகத்தின்படி, ஹெயாங்கின் முக்கியப் பண்பாட்டு நடவடிக்கையாக, ஹெயாங் யாங்கோ விழா ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. யாங்கோ நடனம், அரங்கேற்ற வடிவத்தில் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றது. முதலாவது வகை, குழு நடனமாகும். இந்நடன வகையின் அரங்கேற்றம், பல்லாயிரக்கணக்கான குதிரைகள் பாய்ந்து செல்வது போன்று காட்சியளிக்கிறது. இன்னொரு வகை, இருவர் அல்லது பலர் ஆடும் நடனமாகும். இந்நடன வகையின் அரங்கேற்றம், ஒரு சிறு பாலத்தின் கீழ் நீர் ஓடிக் கொண்டிருப்பது போன்ற காட்சியளிக்கிறது என்று வாங் ஜின் ச்சாவ் அறிமுகப்படுத்தினார்.