• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ச்சியாங் இன மக்களின் பூத்தையல் கலை
  2013-10-15 09:27:45  cri எழுத்தின் அளவு:  A A A   

"ச்சியாங் இனத்தின் வரலாறு" என்ற புத்தகத்தின்படி, பண்டைக்காலத்தில் ச்சியாங் இனத்தவர்கள் மேற்கு சீனாவின் பல்வேறு இடங்களில் வாழ்ந்தனர். அவர்கள் வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு துறைகளில் ஈடுபட்டனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளில் பங்கெடுத்திருந்தனர். ச்சுன் ச்சியு மற்றும் போர் நாடுகள் காலத்தில், ச்சியாங் இனம் பெருமளவில் பரவி, புகழ்பெற்றது. ஒரு பகுதி ச்சியாங் இனத்தவர்கள், தென் மேற்கு மற்றும் வட மேற்குப் பகுதிகளுக்கு குடிபெயரத் தொடங்கினர். அவர்களில் சிலர், மிங் சியாங் ஆற்றின் மேல் பகுதி, டா து ஆறு மற்றும் அன் நிங் ஆற்றுப்பள்ளத்தாக்கு, சின்காய்-திபெத் பீடபூமி ஆகிய இடங்களில் குடிபெயர்ந்தனர். சீனாவின் மத்திய பகுதிக்குக் குடிபெயர்ந்த ச்சியாங் இன மக்கள், ஹான் இனத்துடன் ஒன்றிணைந்தனர். மிங் சியாங் ஆற்றின் மேல் பகுதிக்குக் குடிபெயர்ந்த சியாங் இன மக்கள், உள்ளூர் ஆதி குடிமக்களுடன் ஒன்றிணைந்தனர். தற்காலத்தில் மிங் சியாங் ஆற்றின் மேல் பகுதியில் குழுமி வாழும் மக்களே ச்சியாங் இனத்தவர் என அழைக்கப்படுகின்றனர்.

ச்சியாங் இனம், விவேகம் மிக்க இனமாகும். அவ்வினம் அழகியலை மிகவும் விரும்புகிறது. வண்ணமயமான, அழகான ச்சியாங் இனப் பூத்தையல் பொருட்கள், ச்சியாங் இன மகளிரின் விவேகத்தையும், அழகு மீதான ச்சியாங் இன மக்களின் ஆசையையும் வெளிப்படுத்துகின்றன. ஆயிரம் ஆண்டுக்கால வளர்ச்சியில், ச்சியாங் பூத்தையலின் தனிச்சிறப்பு உருவாகியுள்ளது. ஹுனான் மாநிலத்தின் சியாங் (xiang)பூத்தையல் பொருட்கள், ஜியாங் சூ மாநிலத்தின் சூ சோ நகரின் சூ பூத்தையல் பொருட்கள் ஆகியவற்றுடன் இணைந்து, ச்சியாங் இனப் பூத்தையல் தலைசிறந்த கைவினை கலைப் பொருட்களாக மாறியுள்ளது. ச்சியாங் இனப் பூத்தையல் பொருட்கள், சீனப் பண்பாட்டின் தலைசிறந்த மலர் என அழைக்கப்படுகின்றன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040