பதிவின்படி, தெற்கு சுங் வம்சப் பேரரசர் குவாங் சொங் (Guang Zong)ஆட்சி புரிந்த காலத்தில், ச்செ சியாங் மாநிலத்தின் யுங் ஜியாப் பிரதேசத்தில் உள்ளூர் இசை நாடகம் விரைவாக வளர்ந்து வந்தது. அந்த இசை நாடகம், தென் சீனாவின் நாட்டுப்புற இசையின் அடிப்படையில் உருவாகியதால், அதற்கு நன் ச்சி அதாவது தெற்கு இசை நாடகம் என அழைக்கப்பட்டது. நன் ச்சியின் வளர்ச்சிப் போக்கில், டாங் மற்றும் சுங் வம்சங்கள் தொட்டு, பல பக்குவமடைந்த பாரம்பரிய இசை வடிவங்களை இது படிப்படியாக சேர்த்து, செழிப்பாகி வந்தது.