குன் ச்சுவின் உள்ளார்ந்த கலை ஆற்றலை வெளிக்கொணர்த்து, அதை ஒரு முக்கிய பாட்டு வடிவமாக வளர்த்தவர், நாட்டுப்புற இசை கலைஞர் வெய் லியாங் ஃபூ தான். சீன வரலாற்றில் அதிகமான தலைசிறந்த நாட்டுப்புறக் கலைஞர்களைப் போல், வெய் லியாங் ஃபூ பற்றிய தகவல் குறைவே. அக்காலத்தின் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களில் பதிவு செய்யப்பட்ட பதிவுகளின்படி, மிங் வம்சத்தின் பேரரசர்களான ஜியா சிங் மற்றும் லோங் ச்சிங் ஆட்சி புரிந்த காலத்தில் அவர் வாழ்ந்தார். அவரது சொந்த ஊர், சியாங் சி மாநிலத்தின் யூ ச்சாங் ஆகும். அவர் நீண்டக்காலமாக சியாங் சூ மாநிலத்தின் Tai Cangவில் தங்கியிருந்து, நாட்டுப்புற இசையைப் பாடி வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டார். அப்போது சீனாவின் வட மற்றும் தென் பகுதிகளில் பரவி வந்த பல இசைகளை அவர் அறிந்து கொண்டார். ஆய்வு மூலம், குன் ஷான் இசை பாணியில் ஏற்றத்தாழ்வு மாற்றம் குறைந்த எளிமையான இன்னிசை மீது அவர் படிப்படியாக மனநிறைவின்மை அடைந்தார். அதனால் அவர் கலை துறை நண்பர்களுடன் இணைந்து ஒத்துழைத்து, குன் ஷான் இசை பாணியைப் பன்முகங்களிலும் சீர்திருத்தத் துவங்கினார்.