60 வயதான எலுன்ச்சுன் Man Gu Mei என்னும் முதிய அம்மையார் சிறு வயதிலிருந்தே அவரது தாயிடமிருந்து கவரிமான் தோல் பொருட்களையும், பிர்ச் மரப் பட்டைப் பொருட்களையும் தயாரிக்கக் கற்றுக்கொண்டார். தற்போது, எலுன்ச்சுன் இனத்தின் பிர்ச் மரப் பட்டை கைவினை கலை வாரிசாக, அவர் இக்கைவினை திறனை மேலதிக மக்களுக்குக் கற்றுக்கொடுத்து வருகிறார். அது மட்டுமல்ல, 2011ஆம் ஆண்டு, அவர் மால்டாவுக்குச் சென்று, "சீன உள் மங்கோலியப் பண்பாட்டு வாரம்" என்ற நடவடிக்கையில் கலந்து கொண்டார். இந்த அனுபவத்தின் காரணமாக, Man Gu Mei எலுன்ச்சுன் இனப் பண்பாட்டின் கையேற்றலுக்கு மேலதிக பொறுப்புணர்வு கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:
"வேட்டையாடும் பண்பாட்டுக் கையேற்றலில் ஈடுபட்டுள்ளேன். இளைஞர்களுக்கு எலுன்ச்சுன் இனத்தின் மொழி, கைவினைத் திறன், விலங்கு தோல் பண்பாடு, பிர்ச் மரப் பட்டை பண்பாடு ஆகியவற்றை ஆக்கப்பூர்வமாக கற்றுக்கொடுக்க விரும்புகிறேன். எனது தேசிய இனத்தின் சார்ப்பில், இப்பணியில் செவ்வனே ஈடுபட விரும்புகிறேன்" என்றார் அவர்.