தற்போது எலுன்ச்சுன் இனத்தின் வேட்டையாடும் பண்பாடு, சிறு ரக பணிமனை என்ற முறையிலும், குடும்பத் தயாரிப்பு என்ற முறையிலும் கையேற்றப்பட்டு வருகிறது என்று Xiao Zhong Guo என்பவர் செய்தியாளரிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கையின் காரணமாக, பிர்ச் மரப் பட்டை கைவினைக் கலைப் பொருட்களின் மூலப் பொருட்களை மக்களுக்கு செயற்கை முறையில் உருவாக்க முடியாது. அதனால் பிர்ச் மரப் பட்டை கைவினைக் கலைப் பொருட்களின் தயாரிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேட்டையாடத் தடை கொள்கையின் காரணமாக, கவரிமான் தோல் கைவினைக் கலைப் பொருட்களின் தயாரிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. பல காரணிகளின் கட்டுப்பாட்டினால், எலுன்ச்சுன் இனத்தின் கைவினைக் கலைப் பண்பாடு, தொழிற்சாலையில் கைவினைக் கலைப் பொருட்களைத் தயாரிப்பது என்பதாக வளர்ச்சியடைய முடியவில்லை. சிறு ரக பணிமனை அல்லது குடும்பப்பணி முறையில் இப்பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாக்க மட்டுமே முடிகிறது" என்றார் அவர்.
அரிய எலுன்ச்சுன் இனப் பண்பாட்டைப் பாதுகாத்து, கையேற்றும் அதே வேளையில், இப்பண்பாடு காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்றதாக வளரச் செய்ய வேண்டும் என்று எலுன்ச்சுன் இனத்தவர்கள் விரும்புகின்றனர். அதற்காக அவர்கள் அரும் பாடுபட்டு வருகின்றனர்.
நேயர்களே, "எலுன்ச்சுன் இனத்தின் கைவினை கலைப் பண்பாடு" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.