சீனாவில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைக்கு வந்த துவக்கத்தில், வேளாண் துறையை வளர்த்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு, தேயிலை பயிரிடுவதை உள்ளூர் அரசு ஆக்கப்பூர்வமாக ஊக்குவித்துள்ளது. உள்ளூர் காலநிலை, வரலாறு, பண்பாடு உள்ளிட்ட காரணிகளின் செல்வாக்குடன், லுங் யன் பிரதேசத்தில் தேயிலை தொழில் சீராக வளர்ந்து வந்துள்ளது. பல ஆண்டுக்கால நடைமுறை மூலம், லுங் யனில் பயிரிடப்படும் தேயிலை வகைகள், சீனாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்று லுன் யன் நகரின் தைவான் நீரிணை இரு கரை தேயிலை பரிமாற்றச் சங்கத்தின் துணைத் தலைவர் லீன் ஜின் போ தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"தேயிலை, மக்களின் உடல் நல மேம்பாட்டுக்கு துணை புரிகிறது. தேயிலையின் இந்த தனிச்சிறப்பு, குறிப்பிட்ட அளவில் தேயிலை தொழிலின் வளர்ச்சியைத் தூண்டுகோலாகும். இது தேயிலை தொழிலின் வளர்ச்சிக்கான மூல ஆற்றலாகும். மக்களின் வாழ்க்கைத் தரத்தின் உயர்வுடன், மக்கள் தத்தமது உடல் நலத்தில் மேலும் கவனம் செலுத்துகின்றனர். இதனால் தேயிலையின் இத்தனிச்சிறப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது" என்றார் அவர்.