கடந்த சில ஆண்டுகளில், லுங் யன் நகராட்சி, லுங் யன் நகரின் தைவான் நீரிணை இரு கரை தேயிலை பரிமாற்றச் சங்கம், தேயிலை தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளுடன், லுங் யன் தேயிலை தொழில் அதற்கு சொந்தமான தொழில் சின்னத்தைப் பெற்றுள்ளது. இத்தொழில் சின்னத்தின் பெயர், ச்சாங் பிங் daffodils தேயிலை என்பதாகும். லுங் யன் யூ சியாங் நன் தேயிலை கூட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ச்சாங் ஷி ச்சாவ் இது பற்றி அறிமுகம் செய்தார். அவர் கூறியதாவது:
"கடந்த ஐந்தாண்டுகளில் ச்சாங் பின் நகராட்சி, லுங் யன் நகராட்சி, லுங் யன் நகரின் தைவான் நீரிணை இரு கரை தேயிலை பரிமாற்ற சங்கம் ஆகியவை, லுங் யன் தேயிலை தொழிற்சின்னத்தை உருவாக்குவதில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளன. இது வரை இதற்காக பல கொள்கைகளை வெளியிட்டுள்ளன. தவிர, தேயிலை தயாரிப்பு போட்டிகள் உள்ளிட்ட சில நடவடிக்கைகள், தேயிலை நுகர்வைத் தூண்டியுள்ளன. தற்போது, அரசும், சங்கமும் கரிம தேயிலையின் வளர்ச்சியை விரைவுபடுத்துகின்றன" என்றார் அவர்.
லுங் யன் தேயிலையின் புகழ் உயர்ந்து வருவதுடன், தேயிலை தொழிற்சின்னத்தை நிலைநாட்டுவது உள்ளூர் பிரதேசத்தில் பரவி விட்டது. லுங் யனின் தேயிலை தொழில் சந்தைமயமாகி வருகிறது.
அன்பான நேயர்களே, இது வரை ஃபூ சியன் மாநிலத்தின் லுங் யன் தேயிலை தொழிலின் வளர்ச்சி பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது. அடுத்த வார நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம்.