1984ஆம் ஆண்டு பிறந்த நாயாநெய்மன், அதே வயதினரைப் போல் வெளியூரில் கல்வி பயின்றவர்தான். ஆனால் அவரால் யு கு மொழியைச் சரளமாக பேச முடியும். அவர் கூறியதாவது:
"சிறு வயதிலேயே ஆயர் பிரதேசத்தில் வாழ்ந்து வந்தேன். பெரும்பாலான ஆண்டுகள் வெளியூரி்ல் கல்வி பயின்றேன். சொந்த ஊரில் தங்கியிருந்த நேரம் குறைவுதான். ஆனால் சிறு வயதிலிருந்தே யு கு மொழியை நேசித்தேன். அம்மொழியை அதிகமாக பேசும் போக்கில், அழியும் ஆபத்தில் இருக்கின்ற பல சொற்களை நினைவுகூர்கின்றேன்" என்றார் அவர்.