36 வயதான லீ தே ச்சின், பாய் கு யாவ் இனத்தைச் சேர்ந்தவர். நான் டான் மாவட்டத்தின் லீ ஹூ யாவ் இன வட்டத்தின் ஹுவாய் லீ கிராமத்தில் வாழ்கின்றார். முந்தைய காலத்தில், பெய் கு யாவ் இனத்துக்கு செழிப்பான பண்பாடு இருந்தது. வெண்கல முரசு, பாய் கு யாவ் இனப் பண்பாட்டில் மிக முக்கிய அம்சமாகும் என்று லீ தெ ச்சின் நினைவுகூர்ந்து தெரிவித்தார். ஆண்டுதோறும் வேளாண் உழைப்புக்கு பிறகும் போதும், முதியோர் மரணமடையும் போதும் வெண்கல முரசை அடிக்க வேண்டும். இவ்வெண்கல முரசுகள் பெரும்பாலும் தலைமுறை தலைமுறையாக கையேற்றப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
வெண்கல முரசு அடிக்கும் பழக்க வழக்கம் இன்னும் பரவியுள்ள போதிலும், சொந்த ஊரிலிருந்து வெளியூருக்குச் சென்று வேலை செய்யும் மக்கள் மென்மேலும் அதிகரிப்பதுடன், வெண்கல முரசின் முக்கியத்துவம் முன்பை விட குறைந்து வருகிறது என்று லீ தெ ச்சின் தெரிவித்தார். சில வெண்கல முரசுகள் நாசமாகியுள்ளன. பெய் கு யாவ் இனத்தின் இளைஞர்கள் பலர், தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த வெண்கல முரசுகளை வெளியூரில் விற்பனை செய்ததால். இம்முரசுகள் பல்வேறு இடங்களில் சிதறிக் காணப்படுகின்றன. பெய் கு யாவ் இனப் பண்பாட்டை கையேற்றுவதில் இன்னல்களும் ஏற்பட்டுள்ளன.