ஓரிரு ஆண்டுகளில் கொஞ்சம் பணம் சம்பாதித்த பிறகு, அவர் பல்வேறு இடங்களுக்குச் சென்று, வெண்கல முரசுகளையும், பெய் கு யாவ் இன ஆடைகளையும் சேகரிக்கிறார். அவை, தலைமுறை தலைமுறையாக கையேற்றப்பட வேண்டும் என்று லீ தெ ச்சின் விருப்பம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
"உள்ளூர் பிரதேச அரசு, பாய் கு யாவ் இனம் தொடர்பான ஓர் அருங்காட்சியகத்தை நிறுவியுள்ளது. எனக்கு ஒரு கனவு உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் எனது விருப்பப்படி நாட்டுப்புற அருங்காட்சியகத்தை உருவாக்க வேண்டும் என்றும், நான் சேகரிக்கும் பெய் கு யாவ் இன ஆடைகளையும், வெண்கல முரசுகளையும் அதில் காட்சிக்கு வைக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்" என்றார் அவர்.
நேயர்களே, "பெய் கு யாவ் இன இளைஞர் ஒருவரின் கனவு" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.
சீனப் பண்பாட்டு நிகழ்ச்சி பற்றிய நேயர்களின் கருத்துக்களை மொழிப்பெயர்ப்பாளர் மீனாவுக்கு கடிதங்கள் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ தெரிவியுங்கள்.