• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:பெய் கு யாவ் இன இளைஞர் ஒருவரின் கனவு
  2014-03-17 10:05:52  cri எழுத்தின் அளவு:  A A A   

வெண்கல முரசுகளைச் சேகரிப்பது, அதிக பணம் செலவை ஏற்படுத்தும் பணியாகும். தலைமுறை தலைமுறையாக கையேற்றப்பட்டு வரும் இந்த வெண்கல முரசுகளின் விலை பொதுவாக பத்தாயிரம் யுவானை எட்டியுள்ளது. லீ தெ ச்சின்னின் வீட்டில் உள்ள அகலமற்ற அறையில், ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைத் தவிர, இதர மின் சாதனங்கள் எதுவும் காணப்படவில்லை.

லீ தெ ச்சின்னின் குடும்பம் செல்வச் செழிப்பு அடைந்ததல்ல. அவரது குடும்பத்தினர் வயலில் உழைப்பது மூலம் சிறிதளவு வருமானம் பெறுகின்றனர். இக்குடும்பத்துக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, லீ தெ ச்சின் வெளியூரில் வேலை செய்து, பணம் சம்பாதிக்க வேண்டியிருந்தது. 2013ஆம் ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை, அவர் குவாங் சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நான் நிங் நகரிலுள்ள ஒரு கட்டிட கட்டுமான இடத்தில் வேலை செய்ததால், சுமார் 30 ஆயிரம் யுவானைச் மட்டுமே சம்பாதித்தார். லீ தெ ச்சின் கூறியதாவது:

"வெண்கல முரசுகள் மற்றும் ஆடைகளைச் சேகரிப்பதில் எனது ஆர்வத்தை இது பாதிக்கவில்லை. ஏனெனில், அப்பொருட்களைச் சேகரிக்கும் பணி, எனது வாழ்நாள் பணியாகும்" என்றார் அவர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040