வெண்கல முரசுகளைத் தவிர, ஆடைகள், பாய் கு யாவ் இனத்தின் மிக தெளிவான அடையாளமாகும். ஹூவாய் லீ கிராமவாசியின் அறிமுகத்தின்படி, பெய் கு யாவ் ஆடைகள் அனைத்தும் கையால் தான் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வோர் இணை ஆடையின் விலை, 2400 யுவானை எட்டுகிறது. சில ஆடைகள் விற்கப்படுகின்றன. சிக்கலான கைவினை செய்முறையினால், பெய் கு யாவ் இன இளைஞர்கள் ஆடைகளைத் தயாரிக்கும் கைவினை தொழில் நுட்பத்தைக் கற்றுத்தேரவில்லை.
பெய் கு யாவ் இனப் பண்பாட்டை மேலும் செவ்வனே கையேற்றி, பாதுகாக்கும் பொருட்டு, லீ தெ ச்சின், வெண்கல முரசுகள், பெய் கு யாவ் ஆடைகள் ஆகியவற்றை சேகரிக்கத் தொடங்கினார். லீ தெ ச்சின் கூறியதாவது:
"சில வெண்கல முரசுகளைச் சேகரித்துள்ளேன். சில வெண்கல முரசுகள், மிங் வம்சத்தின் இறுதிக் காலத்திலிருந்து இது வரை இருந்து வருகின்றன. வெண்கல முரசுகளின் விலை, மிக மலிவாக, 40 ஆயிரம் யுவானை எட்டியுள்ளது. நான் சேகரித்துள்ள வெண்கல முரசுகளை பாதுகாத்து நன்றாக வைக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் வெண்கல முரசு கண்காட்சியை நடத்த வேண்டும் என்றும் விரும்புகிறேன்" என்றார் அவர்.