• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
து லோவ் ஓவியர் லியாங் மிங்
  2014-04-11 09:42:06  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில், து லோவ் குடியிருப்புக்கள் சீன மக்களின் கவனத்தை ஈர்க்கத் துவங்கின. லியாங் மிங் உள்ளிட்ட ஓவியர்கள் பலர், து லோ குடியிருப்புக்களைக் கருப்பொருளாக கொண்டு ஓவியம் வரையத் துவங்கினர். ஆனால், து லோவ் ஓவியத்தை நன்றாக வரைவதில் இன்னல்கள் அதிகமாக நிலவுகின்றன. சில ஓவியர்கள் இன்னல்களை எதிர்நோக்கி, து லோவ் ஓவியத்தை வரைவதைக் கைவிட்டு விட்டனர். ஆனால் லியாங் மிங் து லோவ் ஓவியத்தை வரைப்பதில் ஊன்றி நின்று வருகின்றார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, அவர் து லோவ் ஓவியத்தை வரைந்து வருகிறார்.

"லோங் யன் நகரில் தங்கியிருப்பதால், து லோவ் குடியிருப்புகளுக்கு அடிக்கடி செல்வதுண்டு" என்று 52 வயதான லியாங் மிங் தெரிவித்தார். தற்போது, அவர் லோங் யன் நகரின் பண்பாட்டு அரங்கின் தலைவராகவும் பதவி ஏற்கிறார். அவர் ஹாக்கா இன குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே அவருக்கு து லோவ் குடியிருப்பு மீது பேரார்வமும், நேசமும் இருந்தது. அவர் இளைஞராக இருந்த போது, சிற்பக் கலையை கற்றுக்கொண்டு, து லோவ் குடியிருப்பின் வடிவம் மற்றும் பண்பாட்டை அவர் ஆழமாக புரிந்து கொண்டார். பின்னர், அவர் சீன மத்திய நுண்கலைக் கழகத்தில் நாட்டுப்புற நுண்கலை பற்றி கற்றுக்கொண்டார். அந்த அனுபவத்தின் காரணமாக, சீன பொது மக்களின் குடியிடிப்புக்களின் மாதிரியாக திகழ்கின்ற து லோவ்வுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளார்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040